தமிழ் திரையுலகின் பிரபல காமெடி நடிகரான செந்தில் நாளை அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக அமைப்பு செயலாளராக நடிகர் செந்தில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், திடீரென அந்த பொறுப்பில் இருந்து நடிகர் செந்தில் நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், சென்னையில் நாளை அதிமுக சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில், நடிகர் செந்தில் அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.