மூத்த நடிகர் ஜோக்கர் துளசி கரோனா பாதிப்பால் மரணமடைந்துள்ளார்.

1976-ல் தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமனார் ஜோக்கர் துளசி. நாடகங்களில் ஜோக்கர் வேடத்தில் நடித்ததால் ஜோக்கர் துளசி என அழைக்கப்பட்டார். பல படங்கள், தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். கோலங்கள், வாணி ராணி, கஸ்தூரி போன்ற தொடர்களில் நடித்து ரசிகர்களிடம் கவனம் பெற்றார்.

இந்நிலையில் சமீபத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஜோக்கர் துளசி, சிகிச்சை பலனின்றி காலமானார்.

ஜோக்கர் துளசியின் மறைவுக்கு சமூகவலைத்தளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே