36 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிரதமருக்கு முதல்வர் கடிதம்..!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாணக்கூறி கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்த கடிதத்தில், ” இலங்கை கடற்படை மூலமாக கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 36 பேரை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த 36 மீனவர்கள் மற்றும் அவர்களின் 5 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீனவர்கள் விடுவிப்பு தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு தெரியப்படுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்று தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மீன்பிடித்துக்கொண்டு இருக்கும் போது, எல்லைதாண்டி வந்து மீன்பிடிப்பதாக இலங்கை கடற்படை தொடர்ந்து குற்றம் சுமத்தி தமிழக மீனவர்களை கைது செய்யும் சூழல் தொடர்கதையாகியுள்ளது.

மேலும், நடுக்கடலில் மீனவர்களை பல்வேறு சித்ரவதைகளுக்கு உள்ளாக்கி, மீனவர்களின் படடுகளை சேதப்படுத்தி, மீன்பிடி வலைகளை கிழித்து பல காலகட்டங்களில் அட்டூழியம் செய்து வருவதும் தொடர்கதையாகியுள்ளது.

கொரோனா பரவலுக்கு பின்னர் தற்போது மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்கையில், இலங்கை கடற்படையின் நடவடிக்கையால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே