தியாகராய நகரிலுள்ள நடிகர் சங்க அலுவலகத்தில் தீ விபத்து…!!

சென்னை தியாகராய நகரில் இருக்கும் தென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தல் அலுவலகத்தில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது.

சென்னை தியாகராய நகரில் உள்ள அபிபுல்லா சாலையில் தென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தல் செயல்பட்டு வருகிறது.

ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில் இந்த அலுவலகம் செயல்பட்டு வரும் நிலையில், இன்று காலை 6 மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அந்த கட்டிடத்தில் காவலாளி தகவல் கொடுத்ததால், சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்பகுதியில் பட்டாசு வெடித்ததால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என தெரிகிறது.

தென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்ற நிலையில், அது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் தேர்தல் குறித்த முக்கிய ஆவணங்கள் வங்கியில் வைக்கப்பட்டிருக்கின்றன.

அரசு அறிவுறுத்தலின் பேரில், வருவாய்த் துறை சிறப்பு அதிகாரி ஒருவர் இந்த அலுவலகத்தை நியமித்து வருகிறார்.

தற்போது இங்கு தீ விபத்து நிகழ்ந்துள்ளதால் தேர்தல் தொடர்பான ஆவணங்கள் தீயில் எரிந்ததா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய ஆவணங்கள் பல எரிந்து விட்டதாகவே முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே