ஒரு பெண் பயணி நின்றாலும் பேருந்தை நிறுத்த வேண்டும் – ஓட்டுனர், நடத்துனருக்கு அட்வைஸ்..!!

சாதாரண கட்டண நகர, மாநகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசுப்போக்குவத்து கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகர, மாநகர பேருந்துகளில் கட்டணமில்லாமல் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. இத்திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், நகரம் மற்றும் மாநகர பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் செய்துவது தொடர்பாக பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை போக்குவரத்துத்துறை அரசு செயலாளர் சமயமூர்த்தி இன்று வெளியிட்டுள்ளார்.அதில் கூறப்பட்டுள்ள நெறிமுறைகள்:

* ஒரு பயணி என்றாலும் அவருக்காக பேருந்தை நிறுத்தி அந்த பயணியை ஏற்றிச்செல்ல வேண்டும்.

* பெண் பயணிகளிடன் அன்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

* வயது முதிர்ந்த பெண்கள் இருக்கையில் அமர உதவி செய்ய வேண்டும்.

* பெண்களிடம் எரிச்சலூட்டும் வகையிலோ, கோபமாகவோ, இழிவாகவோ, ஏளனமாகவோ பேசக்கூடாது.

* பெண்கள் பேருந்தில் ஏறும்போதும், இறங்கும்போதும் கண்காணித்து பாதுகாப்பாக ஏறி,இறங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* குறிப்பிட்ட பேருந்து நிறுத்தத்தில் தான் பேருந்தை நிறுத்த வேண்டும்.

* பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் பல்வேறு வகையிலான தொடர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.- இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே