300 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன்

மகாராஷ்டரா மாநிலம் நாசிக்கில் 300 அடி ஆழம் கொண்ட ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவனை தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் பல மணி நேரம் போராடி மீட்டனர்.

விவசாயிகள் தங்களின் தண்ணீர் தேவைக்காக ஆழ்துளைக் கிணறுகள் தோண்டுவது வழக்கம்.

அவற்றில் தண்ணீர் இருக்கும்பட்சத்தில் அதனைப் பாதுகாத்து விவசாயம் செழிக்க பயன்படுத்திக் கொள்கின்றனர்.

ஆனால் தண்ணீர் இல்லையெனில் அவற்றை அப்படியே விட்டுவிடும் சூழல் நிலவுகிறது.

இது பல சமயங்களில் உயிர் பலி வாங்கும் குழிகளாக மாறிவிடுகின்றன.

ஆபத்தான குழிகள் இருப்பதை அறியாத சிறுவர்கள் தவறுதலாக அதற்குள் விழுந்து விடுகின்றனர்.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் 300 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் 6 வயது சிறுவன் தவறி விழுந்துள்ளான்.

இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான். அவனை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது சிறுவனின் உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே