புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மே 31 வரை நீட்டித்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு..!!

மே-31ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீடித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரியில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, கடந்த 10-ம் தேதி முதல், 24ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில், தற்போது மே-31ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீடித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய கடைகள் திறந்திருக்கும். பொதுமக்கள் தங்களது வீடுகளின் அருகில் உள்ள கடைகளில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குமாறும், அதிக தூரம் சென்று பெரிய கடைகளில் பொருட்களை வாங்குவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே