தெலங்கானாவில் பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை – உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தீபாவளியன்று தெலங்கானா மாநிலத்தில் பட்டாசு விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடை விதித்து ஐதராபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட்டாசு வெடிக்க தடை செய்யப்பட்டது தொடர்பாக விளம்பரப்படுத்த மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வரும் 19 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

டெல்லி, ராஜஸ்தான், மேற்குவங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் ஏற்கனவே பட்டாசு வெடிக்க தடை விதித்திருப்பது சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே