தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 2021 ஜன., 15ல் வெளியிடப்படும் என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் 2021ம் ஆண்டு மே மாதம் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கான பணிகளை துவங்க தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.
இந்நிலையில், தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வெளியிட்ட அறிக்கை: வரும் நவ.,16 ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். ஜன., 5 வரை வாக்காளர்கள், பெயர் திருத்தம், நீக்கம், முகவரி மாற்றம் செய்யலாம்.
இறுதி வாக்காளர் பட்டியல், ஜன.,15ல் வெளியிடப்படும். தகுந்த ஆதாரங்களோடு ஆன்லைன் மூலம் புதிய வாக்காளர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
சிறப்பு முகாம்கள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.