சென்னை: தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 2.67 லட்சமாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த பல வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5000ஐ கடந்து வருகிறது. நாள்தோறும் கொரோனா பாதிப்பு விவரங்களை தமிழக சுகாதாரத்துறை அறிவித்து வருகிறது.
அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, புதியதாக 5,890 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. ஆகையால் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 3,26,245 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று 1,187 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் சென்னையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,14,235 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் மிக அதிக அளவாக 117 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.
ஒட்டுமொத்தமாக இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,514 ஆக அதிகரித்துள்ளது. இன்று 5,556 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். இஇதன் மூலம் தமிழகத்தில் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 2,67,015 ஆக உயர்ந்துள்ளது.