இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரையில் 24 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
7 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
உலகின் பல நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், நோய் தொற்று தங்கள் நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனால் பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.
இந்தியாவைப் பொறுத்த வரை மஹராஷ்டிர, தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மிக வேகமாகப் பரவி வருகிறது.
ஆரம்பத்தில் குறைவான பாதிப்பு இருந்த மேற்குவங்கத்தில் தற்போது பாதிப்புகள் அதிகமாக தொடங்கியுள்ளது.
இந்நிலையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஒருவர் கொரோனா அறிகுறியுடன் இருந்த வெளிமாநில தொழிலாரை பாதுகாப்பு உடை அணிந்து கொண்டு மருத்துவமனை கொண்டு சேர்த்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.