லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பயங்கர சத்தத்துடன் சக்திவாய்ந்த குண்டு வெடித்துள்ளது. இந்த விடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.
இந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் கரும்புகை சூழ்ந்தன.
முதற்கட்டமாக வெளியானத் தகவலின்படி, பெய்ரூட் துறைமுகப் பகுதியில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்திருக்கலாம் என்று தெரிகிறது.
முதல் வெடிப்பு துறைமுகத்தில் ஏற்பட்டது. இரண்டாவது வெடிப்பு நகரத்திற்கு அருகில் இருந்தது.
முதற்கட்ட தகவல்களின்படி, இரண்டு வெடிப்புகள் 15 நிமிட இடைவெளிகளுக்குள் நிகழ்ந்தன. இது நகர மையத்தில் உள்ள முன்னாள் பிரதமர் சாத் ஹரிரியின் இல்லத்திற்கு அருகில் நடந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
இரண்டாவது வெடிப்பு மிகவும் சத்தமாக இருந்தது மற்றும் முழு நகரத்தையும் வீடுகளையும் உலுக்கியது.
இந்த வாரம் முன்னாள் பிரதமர் ரபிக் ஹரிரி 2005’இல் கொல்லப்பட்டதற்கான வழக்கில் சர்வதேச தீர்ப்பாயம் தீர்ப்பு வெளியிட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பெய்ரூட்டில் நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வட்டாரங்களின்படி, தீப்பிழம்புகள் பட்டாசு குடோனில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த கட்டத்தில் வெடிப்பின் காரணத்தைக் கண்டறிவது கடினம் என்றாலும், சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி சேனல்கள் முழுவதும் உள்ள வீடியோக்கள், வெடிப்பிற்கு பட்டாசு குடோன் மட்டுமே காரணமாக இருக்காது என தெரிவித்துள்ளன.
லெபனான் தற்போது ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் பெய்ரூட் இந்த அளவிலான வெடிப்பைக் காணவில்லை என்று பல தகவல்கள் கூறுகின்றன.
குண்டுவெடிப்பு காரணமாக அப்பகுதியில் அதிர்வுகள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து, மக்கள் அச்சத்துடனும், பதற்றத்துடனும் காணப்படுகின்றனர்.