சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை 2020-ஐ மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஆபத்து விளைவிக்கும் திட்டங்களைக் கூட சுற்றுச்சூழல் முன் அனுமதியே பெறாமல் செயல்படுத்த வகை செய்யும் ஓர் அறிவிக்கையை பேரிடர் காலத்திலும் அவசரமாக வெளியிட்டிருப்பது கண்டனத்திற்குரியது என்று பதிவிட்டுள்ளார்.