கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதித்த 4 காவலர்கள் பலியாகியிருப்பதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.
ஜூன் 12-ம் தேதி நிலவரப்படி மகாராஷ்டிரத்தில் கரோனா பாதித்த காவலர்களில் 35 பேர் இதுவரை மரணம் அடைந்துள்ளனர். இவர்களில் 21 பேர் மும்பை காவல்துறையைச் சேர்ந்தவர்களாவர்.
நாட்டிலேயே கரோனா தொற்று அதிகம் இருக்கும் மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகர் மும்பையில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
இந்த நிலையில், கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 1,233 காவலர்கள் குணமடைந்து வீடு திரும்பியிருப்பதாகவும், அவர்களில் 334 பேர் பணிக்குத் திரும்பிவிட்டதாகவும் மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.