ஜூன் 12-ம் தேதி முதல் செங்கல்பட்டில் இருந்து திருச்சிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
செங்கல்பட்டில் இருந்து விழுப்புரம், கும்பகோணம் வழியாக இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும்;
ஜூன் 12-ம் முதல் இயக்கப்படும் இந்த ரயில் மேல்மருவத்தூர், விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், தஞ்சை, மயிலாடுதுறை, கும்பகோணம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது பரவலாக ரயில் சேவை தொடங்கப்பட்டு வருகிறது.