தமிழகத்தில் இன்று (மே 11) ஒரே நாளில் 798 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :
தமிழகத்தில் இன்று புதிதாக 798 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில், 514 ஆண்கள், 284 பெண்கள் அடங்கும்.
மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,002 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையை சேர்ந்த 4 பேர், கடலூரை சேர்ந்த ஒருவர் மற்றும் கன்னியாகுமரியை சேர்ந்த ஒருவர் என கடந்த 24 மணிநேரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
மொத்த பலி எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் 92 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
இதனால் மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 2,051 ஆக உள்ளது.
தற்போது 5,895 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று ஒரே நாளில் 11,862 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.