இந்தியா பற்றி எரிந்து கொண்டிருப்பதற்கு அதிமுகவும், பாமகவுமே காரணம் : ஸ்டாலின்

இந்தியா பற்றி எரிந்து கொண்டிருப்பதற்கு அதிமுகவும், பாமகவுமே காரணம் என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட கிறிஸ்தவர்களுக்கு, பெரியார் நகரில் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார் மு.க.ஸ்டாலின்.

திமுக ஆட்சி பொறுப்பில் இருந்தாலும், இல்லையென்றாலும் சிறுபான்மை சமுதாயத்திற்கு தொடர்ந்து குரல் கொடுக்கும் எனவும், குடியுரிமை சட்ட திருத்தத்தினால் இலங்கை தமிழர்கள், இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதா விவாதத்தின்போது மாநிலங்களவையில் அதிமுக, பாமக ஆகிய இரு கட்சிகளும் எதிர்த்து வாக்களித்திருந்தால், இந்த சட்டத்தை முறியடித்திருக்க முடியும் எனவும் குறிப்பிட்ட ஸ்டாலின், இலங்கை தமிழர்களுக்கு எப்படி இரட்டைக்குடியுரிமையை முதல்வர் வலியுறுத்த முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே