உள்ளாட்சி தேர்தலுக்கு தடையில்லை : சுப்ரீம் கோர்ட் உத்தரவு

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி திமுக தொடர்ந்த வழக்கில் சற்று முன் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழக தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பாணையின் படி உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மற்றும் புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் 3 மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படியே ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே