தமிழகத்தில் இன்று (21-05-2020) மேலும் 776 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று (மே 21) மேலும் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,967 ஆகவும், பலி எண்ணிக்கை 94 ஆகவும் உயர்ந்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

தமிழகத்தில் இன்று 776 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 13,967 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் அரசு மருத்துவமனையில் 3 பேரும், தனியார் மருத்துவமனையில் 4 பேரும் என மொத்தம் 7 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 400 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்த டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 6282 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது குணமடைந்தவர்கள் விகிதம் 44.97 ஆக உள்ளது. மாநிலத்தில் பரிசோதனை ஆய்வகங்கள் எண்ணிக்கை 66 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

இதன் மூலம் இதுவரை 3.72 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் முதலில் நெகட்டிவ் ஆகி வீட்டிற்கு சென்ற 25 பேருக்கு கொரோனா வந்துள்ளது புதிய சவாலாக உள்ளது.

மேலும் வெளிமாநிலங்களில் இருந்து பாசிட்டிவாக வருவோரும் சவாலாக உள்ளனர். இந்த புதிய சவால்களால் தான் தற்போதைய அதிக பாதிப்பு எண்ணிக்கைக்கு காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே