மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பெண்கள் நல்வாழ்விற்கான 7 செயல்திட்டங்களை அறிவித்துள்ளனர்.

அதில்,

1. சீருடைப் பணியில் 50% பெண்கள்: அரசு சேவையில் இருக்கும் ஒவ்வொரு சீருடைத்துறையிலும் 50% பெண்கள் பிரதிநிதித்துவம் உறுதிசெய்யப்படும்.

2.துன்பத்தில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு: துன்பத்தில் இருக்கும் பெண்கள் இரவு நேரங்களில் தங்குவதற்கென்றே அவசரகால இலவச விடுதிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்படுவதுடன், 181 பெண்கள் உதவி எண்ணில் பதிவு செய்யப்படும் புகார்கள் அனைத்தும் தொடர்ந்து கண்காணிக்கும் செயல்முறை நிறுவப்படும்.

3. பெண்களுக்கான தயாரிப்புகளின் பொது விநியோகம்: பெண்களுக்கான சுகாதார நாப்கின்களை அரசாங்கமே கொள்முதல் செய்து, கிராமம் மற்றும் நகர்ப்புற ஏழைப் பெண்கள் மற்றும் இளம்பருவ பெண் குழந்தைகளுக்கு பொது விநியோக முறையில் வழங்கப்படும்.

4.பெண்களுக்கான மாவட்ட அளவிலான மகளிர் வங்கி: பெண்களால்… பெண்களுக்காக… பெண்களுக்கென்று இயங்கும் மகளிர் வங்கி உருவாக்கப்படும்.

5. ஒற்றை தாய்மார்களுக்கான ஆதரவின் குடை: கல்வி, வேலை, திறன் மேம்பாடு, மற்றும் சமூக பொருளாதார ஆதரவு போன்ற அனைத்து உதவிகளும் தனித்து வாழும் தாய்மார்களுக்கு வழங்கப்படுவது உறுதி செய்யப்படும்.

6.சிறப்பு பராமரிப்பு கட்டமைப்புகள்: அரசாங்கம், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பொது இடங்களில் பெண்களுக்கான சிறப்பு உள்கட்டமைப்பு வழங்குவதை உறுதி செய்தல் (பஸ் நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள் போன்றவை..)

7.இலவச ஆரோக்கியம் மற்றும் கருத்தரிப்பு பரிசோதனைகள் : ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒரு முறையாவது அனைத்து பெண்களுக்கும் இலவச ஆரோக்கியம் மற்றும் கருத்தரிப்பு பரிசோதனை வழங்க அரசாங்கம் ஏற்பாடு செய்யும்.

இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே