#CoronaUpdate :நேற்று ஒரே நாளில் 57,584 பேர் டிஸ்சார்ஜ்… நாட்டில் குணமடைந்தவர்கள் விகிதம் 72% ஆக உயர்வு: மத்திய அரசு!!

நாட்டில் இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் 57,584 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்கியது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 19,19,843 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் குணமடைந்தவர்களின் விகிதம் 72 சதவீதத்தை கடந்தது.

இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பின் படி, இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,47,664 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 57,982 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 941 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50,921 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் தற்போது வரை கொரோனாவால் பாதித்த 6,76,900 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே