பேரறிஞர் அண்ணாவின் 51-வது நினைவு நாள்…

பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அக்கட்சியினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணாவின், 51ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகிலிருந்து, மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் நோக்கி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியினர், அமைதி பேரணியாக சென்றனர்.

இதன் முடிவில், பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில், மு.க.ஸ்டாலின், மலர் வளையம் வைத்தும், மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினார்.

மு.க.ஸ்டாலினைத் தொடர்ந்து, திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே