4 வயது பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்து அடித்து கொலை

சென்னை அடுத்த புழலில் 4 வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து அடித்து துன்புறுத்தி சித்ரவதைப்படுத்தி கொலை செய்ததாக 2வது கணவன் வாக்குமூலம் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரமேஷ் என்பவர் பவானி என்ற இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு  2குழந்தைகளுடன் கொடுங்கையூரில் வசித்து வந்தார்.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக ரமேஷை விட்டு பிரிந்த மனைவி பவானி, அதே பகுதியை சேர்ந்த ஆசிப் என்ற இளைஞரை 2வது திருமணம் செய்து கொண்டு, புழல் கண்ணப்பசாமி நகரில் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் தனது 4 வயது மகள் யாழினிக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறி, தனியார் மருத்துவமனைக்கு பவானி கொண்டுச் சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலறிந்த முதல் கணவர் ரமேஷ் தனது குழந்தையின் முதுகு, கழுத்து மற்றும் வயிறு பகுதிகளில் காயங்கள் இருப்பதால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனால் பவானியின் 2வது கணவர் ஆசிபை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.

விசாரணையில் 4 வயது குழந்தை யாழினியை உடலில் சிகரெட்டால் சூடு வைத்தும் அடிவயிறு, கன்னம், முதுகு ஆகிய பகுதிகளில் பலமாக ஜல்லி கரண்டியால் அடித்தும்,  குழந்தையை கொலைவெறியில் வயிற்றில் எட்டி உதைத்தும்  கொன்றதாக ஆசிப் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் இவர் மீது மணலி, கொடுங்கையூர் ஆகிய காவல் நிலையங்களில்  வழிப்பறி ,கஞ்சா விற்பனை செய்த வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து ஆசிப் மீது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்தது மற்றும் கொலை செய்த நோக்கத்தோடு அடித்து துன்புறுத்துவது மற்றும்  போக்சோ சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே