மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி இலவச டேட்டா வழங்கும் திட்டம் தொடக்கம்..!!

கல்லூரி மாணவர்களுக்கு இலவச 2 ஜி.பி டேட்டா வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டன.

தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றன.

இந்த வகுப்புகளில் வீட்டில் இருந்தவாறு மாணவர்கள் பங்கேற்று, தங்களுடைய பாடத்திட்டங்களை படித்து வருகின்றனர்.

இணையவழி வகுப்புகளில் மாணவர்கள் கலந்துகொள்ள ஏதுவாக அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், என்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் படிக்கும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

இதன்மூலம், 9 லட்சத்து 69 ஆயிரத்து 47 மாணவர்கள் பயன்பெறுவர். 

எல்காட் நிறுவனத்தின் மூலமாக விலையில்லா டேட்டா கார்டு வழங்கப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 10ஆம் தேதி அறிவித்து இருந்தார்.

அதன்படி, கல்லூரி மாணவர்களுக்கு 2 ஜி.பி. டேட்டா வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே