மின்சாரம் தாக்கி பலியான சேதுராஜ், தீனா குடும்பத்திற்கு தலா 3 லட்ச ருபாய் : முதல்வர் அறிவிப்பு

மின்சாரம் தாக்கி சென்னையில் உயிரிழந்த சிறுவன் தீனா மற்றும் சேதுராஜ் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் முகலிவாக்கத்தில் சிறுவன் தீனாவும், தாம்பரம் அருகே உள்ள சிட்லபாக்கத்தில் சேதுராஜ் என்பவரும் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

இருவரின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தீனா மற்றும் சேதுராஜ் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே