தமிழகத்தில் 52 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு…!!!இன்று ஒரே நாளில் 49 பேர் பலி…!!!

தமிழகத்தில் இன்று 2141 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் மட்டும் 1773 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு 52334 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 37070 ஆக பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இதுவரை இல்லாத வகையில் இன்று 49 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனையில் 36 பேரும், தனியார் மருத்துவமனையில் 13 பேரும் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 625 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 1017 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரை மொத்தம் 28640 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இன்று 1017 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரை மொத்தம் 28640 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

இன்று மட்டும், 25719 பேர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை மொத்தம் 800443 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே