கவலைக்கிடமான நிலையில் லல்லு பிரசாத் யாதவ்

பீகார் முன்னாள் முதல் அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும் பீகார் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் மாட்டு தீவன ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 2017ல் அடைக்கப்பட்டார் இந்நிலையில் சிறையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் அங்கு அவர் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது, லாலு பிரசாந்தின் சிறுநீரகங்கள் செயல் இழந்து விட்டதாகவும் அவரது உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் மேலும் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே