கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், முதலமைச்சரின் ஆணைப்படி,
- திருப்பூர் மாநகர காவல் ஆய்வாளர் சந்திரமோகன்,
- திருச்சி மண்டல காவல் ஆய்வாளர் ராஜசேகரன்,
- பண்ருட்டி காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளர் பூங்கோதை,
- விழுப்புரம் மண்டல காவல் உதவி ஆய்வாளர் அழகிரி,
- கும்பகோணம் மேற்கு காவல் நிலைய தலைமை காவலர் பார்த்திபநாதன் ஆகியோருக்கு விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக அவர்கள் 5 பேருக்கும் காந்தியடிகள் காவல் விருது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் குடியரசு தினத்தன்று முதலமைச்சரால் இவ்விருது வழங்கப்படும் என்றும், விருதுடன் பரிசுத் தொகையாக தலா 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.