வாட்ஸ் ஆப் குரூப்பில் வருகிறது புதிய வசதி..

வாட்ஸ் ஆப் குழுவில் அனுப்பிய செய்தி சில நொடிகளில் தாமாகவே அழிக்க வைக்க கூடிய வசதி சோதனை செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

உலகின் பலரும் பயன்படுத்தும் உடனடி குறுஞ்செய்திப் பரிமாற்ற சேவையான வாட்ஸ் ஆப், வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து அவ்வப்போது, புதிய மேம்பாடுகளை வழங்கி வருகிறது.

ஏற்கெனவே அனுப்பிய செய்தியை நீக்கும் வசதியும், அதற்கான உச்சபட்ச கால அவகாசத்தையும் வாட்ஸ் ஆப் வழங்கியது.

இந்நிலையில், ஒரு வாட்ஸ் ஆப் குழுவில் அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி எத்தனை நேரத்துக்கு திரையில் தோன்ற வேண்டும் என்பதையும் அனுப்பியவரே தீர்மானிக்கும் வகையில் புதிய வசதி சோதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

அதில் அனுப்பிய 5 விநாடிகள் அல்லது ஒரு மணி நேரம் வரை அந்த குழுவில் தோன்ற வேண்டும் என முன்கூட்டியே செட்டிங் செய்து அனுப்பும் நபர் தீர்மானித்துக் கொள்ளலாம் என சொல்லப்படுகிறது.

அந்த செய்தி நீக்கப்பட்டுவிட்டது என்ற தகவல் கூட குழுவில் இடம்பெறாது எனும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே