போக்குவரத்து விதி மீறல்… அபராதம் குறைகிறது..!

புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் அபராதத்தின் அளவு,  தமிழகத்தில் குறைக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துத்துறை அமைச்சரிடம், அபராதத் தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

தமிழகத்தில் தற்போது வரை பழைய அபராததத் தொகையே வசூலிக்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.

புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் அபராதத்தின் அளவைக் குறைக்க முதலமைச்சர் ஆலோசித்து வருவதாகவும், இதற்கான முடிவு எடுக்கப்பட்டு அரசாணையாக வெளியிடப்படும் என்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே