காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் ”பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” என்னும் சிறப்பு முகாமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்து பார்வையிட்டார்.
மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள அரங்குகளையும் பார்வையிட்டார்.
இம்முகாமில் மொத்தம் 13 அரங்குகள் அமைக்கப்பட்டு,
- தானிய வகைகள், சணலால் செய்யப்பட்ட பைகள்,
- செம்பினால் ஆன தண்ணீர் குவளைகள்,
- தேங்காய் ஓடுகளால் ஆன கலை பொருட்கள்,
- மரப்பேனா,
- பாக்குமட்டை,
- பனை ஓலை,
- கரும்பு சக்கையினால் செய்யப்பட்ட பொருட்கள், உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
மேலும் மாமல்லபுரம் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது.