சென்னையில் மிக கனமழை…!!!

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு மத்திய வங்கக் கடல் மற்றும் அதனை சுற்றி உள்ள வடக்கு ஆந்திர கடலோரப் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை மையம் கூறியுள்ளது.

இதன் காரணமாக கடலோர தமிழகம், வட தமிழக மாவட்டங்கள் மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே சென்னை நகரின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. சென்னை நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, அண்ணா சாலை, ராயப்பேட்டை, சூளைமேடு, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் திடீரென கனமழை பெய்தது.

இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால், சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே