வன்னியர்கள் இடஒதுக்கீடு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம்..!!

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரிய 2 வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம்.

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரிய 2 வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீட்டை எதிர்த்து உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மேலும் 2 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.

முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை விசாரித்த நீதிமன்றம் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரிய 2 வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே