‘இந்தியன் 2’ தாமததிற்கு உண்மையான காரணம் இதுதான்: காஜல் அகர்வால்

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்டு வந்த திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென இந்த படத்தின் படப்பிடிப்பின்போது விபத்து ஏற்பட்டது. அதன் பின் ஏற்பட்ட ஒரு சில பிரச்சனைகளால் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் கொரோனா வைரஸ் காரணமாகவும் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் அனைத்து படங்களின் படப்பிடிப்புகள் தொடங்கி உள்ள நிலையில் ’இந்தியன் 2’ படப்பிடிப்பு மட்டும் இன்னும் தொடங்கவில்லை. மேலும் இயக்குனர் ஷங்கர், ராம்சரண் நடிக்கும் தெலுங்கு திரைப்படம் ஒன்றை இயக்க சென்று விட்டார் என்பதும் கமல்ஹாசன் அரசியல் மற்றும் ’விக்ரம்’ படத்தில் நடிக்க சென்றுவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால்தான் ’இந்தியன் 2’படம் தாமதமாகிறது என கோலிவுட் திரையுலகினர் தெரிவித்து வந்தனர்

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த ’இந்தியன் 2’ படத்தின் நாயகி காஜல் அகர்வால் அவர்கள் ’இந்த படத்தின் பெரும்பாலான தொழில்நுட்ப கலைஞர்கள் அமெரிக்காவில் இருந்து வரவேண்டிய நிலை இருப்பதாகவும் அவர்கள் தற்போது கோவிட் பிரச்சனை காரணமாக இந்தியாவுக்கு வரமுடியாத நிலை இருப்பதாகவும் அதனால் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறவில்லை என்றும் இது தான் இந்த படத்தின் தாமதத்திற்கு உண்மையான காரணம் என்றும் காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்

மேலும் முதல் முதலாக கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் ஆகிய இரண்டு திரையுலக மேதைகளுடன் இணைந்து நடிப்பதில் தனக்கு பெருமையாக இருப்பதாகவும் இந்த படம் விரைவில் மீண்டும் தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தான் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்,

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே