படம் சிறப்பாக இருக்கும் !! சிவகார்த்திகேயன் படத்தின் கதையை போட்டு உடைத்த டைரக்டர் !!

கோலமாவு கோகிலா படம் இயக்கிய இயக்குனர் நெல்சன் அவர்கள் டாக்டர் என்னும் படத்தை இயக்கிவருகிறார். சமீபத்தில் இந்த படத்துடைய முதல் போஸ்டர் கதாநாயகன் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். பிறகு ஊரடங்கு காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அந்த நேரத்தில் படத்தைப் பற்றிய பல சுவாரஸ்யமான விஷயங்கள் செய்திகளாக வெளிவந்தது.

இந்நிலையில் படத்தின் கதையை பற்றி இயக்குனர் நெல்சன் நெல்சன் திலிப்குமார் கூறியுள்ளார். இதில் சிவகார்த்திகேயன் ஒரு டாக்டராக நடிப்பதாகவும் இந்த கேரக்டர் சவாலான கேரக்டராக இருக்கும் என தெரிவித்துள்ளார். தனது சமீபத்திய பேட்டியில், ‘டாக்டர்’ ஒரு மெடிக்கல் த்ரில்லர் என்ற எண்ணம் மக்களுக்கு இருப்பதாக வெளிப்படுத்தியுள்ளதாகவும், மாறாக, இது மிகவும் வேடிக்கை நிரம்பிய பொழுதுபோக்கு படமாக இருக்கும் என கூறியுள்ளார்.

கதையில் மருத்துவராக இருக்கும் சிவகார்த்திகேயன், 6 பெரிய வில்லன்களுடன் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக் கொள்வதாகவும், அவர்கள் அனைவரும் எப்படி அதிலிருந்து வெளியேறுகிறார்கள் என்பதே மீதமுள்ள திரைக்கதை என்றும் அவர் கூறியுள்ளார். படம் மிக சிறப்பாக இருக்கும் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே