நாடு முழுவதும் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. தமிழகத்தில் இந்த திட்டம் முதலில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில், சோதனை அடிப்படையில் கடந்த பிப்வரி மாதம் அமல்படுத்தப்பட்டது.
இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்ததால், தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் இந்த திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்படடது. இதனை தமிழக சட்டசபையில் உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவித்தார். ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக திட்டத்தை அமல்படுத்த முடியவில்லை.
இந்நிலையில், தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் அமல்படுத்தப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம், குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) வைத்திருப்பவர்கள் எந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் கடையிலும் சென்று பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம். குறிப்பாக ஒரு மாநிலத்தில் இருந்து புலம் பெயர்ந்து மற்றொரு மாநிலத்துக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.