நீட், ஜே.இ.இ தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், நீட் தேர்வு திட்டமிட்டபடி செப்டம்பர் 13ம் தேதியும், ஜேஇஇ முதன்மை தேர்வு செப்டம்பர் ஒன்று முதல் 6-ம் தேதி வரையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்விற்கு 15,97,000 பேரும், ஜேஇஇ தேர்வுக்கு 8,58,000 பேரும் பதிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு விரைவில் வழங்கப்படும் என கூறியுள்ள தேசிய தேர்வு முகமை, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி, தேர்வுகளை நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 

தேர்வுகளை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு தேவையான உதவிகளை செய்யுமாறு மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே