கல்யாணராமனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யக்கோரி போராட்டம்..!! 500 க்கும் மேற்பட்டோர் கைது..!!

முகமது நபியை தவறாக பேசிய கல்யாணராமனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி அனைத்து இஸ்லாமிய அமைப்பு சார்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடமுயன்ற பெண்கள் உள்பட 500 -க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

நபிகள் நாயகத்தை இழிவு படுத்திப்பேசியதாக கல்யாணராமன் கைது செய்யப்பட்டார்.

ஆனால், அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யக்கோரி அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் மனிதநேய மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ரபீக் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அப்போது போலீசார் அவர்களை ஆட்சியர் அலுவலகம் அருகில் தடுத்து நிறுத்தினார். 

இதனையடுத்து, அங்கு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரியும்; கல்யாணராமனை பாதுகாத்து வருவதாக கூறி, தமிழக அரசுக்கு எதிராகவும்; மத்திய அரசுக்கு எதிராகவும் முக்கங்களை எழுப்பினர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 500 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே