ஈஷாவில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு சிறப்பு யோகா வகுப்பு..!!

ஐபிஎஸ், ஐஏஎஸ், ஐ.எஃப்.எஸ்அதிகாரிகள் உள்ளிட்ட 88 அரசு அதிகாரிகளுக்கு கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சிறப்பு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

அதிகாரிகள் சந்தித்து வரும் உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகளில் இருந்து விடுபடவும், அதிகாரிகளின் திறன் மேம்பாட்டிற்காகவும் இந்திய அரசு, சர்வேத பயிற்சி மையங்களால் ஆண்டுதோறும் சிறப்பு பயிற்சிகள் அளித்து வருகின்றது.

அந்த பயிற்சிகளில் ஈஷா அறக்கட்டளையின் ‘இன்னர் இன்ஜினியரிங் லீடர்ஷிப்’ பயிற்சியும் ஒன்று.

அதன்படி இந்த 88 அதிகாரிகளுக்கு ஜனவரி 25ம்தேதி முதல் 29ம் தேதி வரை ஐந்து நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியா எனும்சக்திவாய்ந்த் யோகா பயிற்சியும், உடல், மனநலனை மேம்படுத்த எளிய யோகா பயிற்சிகளும் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.

ஈஷா சத்குருவுடன் கலந்துரையாடலும், தியானம் குறித்த நிகழ்வுகளிலும் அதிகாரிகள் பங்கேற்பு நடைபெற்றுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே