சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் விசாரணைக்காக சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்..!!

சென்னையில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் ஆஜராகியுள்ளார்.

சட்டம் ஒழுங்குப் பிரிவில் சிறப்பு டி.ஜி.பியாக இருக்கக்கூடிய ராஜேஷ் தாஸ் பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறி அந்த பெண் எஸ்.பி, உள்துறைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி ஆகியோரைச் சந்தித்து ராஜேஷ் தாஸ் மீது பாலியல் புகார் அளித்தார்.

பெண் ஐ.பி.ஸ் அதிகாரி கொடுத்த பாலியல் புகாரின் பேரில் ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க, 6 பேர் கொண்ட குழு ஒன்றைத் தமிழக அரசு அமைத்திருந்தது. இதையடுத்து, சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டதாக திரிபாதி உத்தரவு பிறப்பித்திருந்தார். 

இதைத்தொடர்ந்து, டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான புகாரை விசாரிக்க விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி நியமனம் செய்யப்பட்டார்.

பின்னர் அவர் மாற்றப்பட்டு சிபிஎஸ்டி எஸ்பி முத்தரசி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பெண் ஐபிஎஸ் அதிகாரி கூறிய பாலியல் புகார் குறித்து விசாரணைக்காக சென்னையில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ராஜேஷ் தாஸ் ஆஜராகியுள்ளார்.

சிறப்பு டிஜிபியை இதுவரை பணியிடை நீக்கம் செய்யாதது ஏன்..? என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று கேள்வி எழுப்பிய நிலையில் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே