மயக்கம் தெளிந்த எஸ்பிபி…! மருத்துவமனையின் அறிக்கையால் ஹேப்பியான ரசிகர்கள்

சென்னை: பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மயக்க நிலையிலிருந்து மீண்டுள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிவித்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் கூறினர்.

எஸ்பிபி உடல் நலம் குணம் பெற வேண்டும் என்று பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந் நிலையில், மயக்கநிலையில் இருந்த எஸ்.பி.பி. தற்போது அதில் இருந்து மீண்டுள்ளதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர்.

அவ்வப்போது அவர் கண் விழித்து பார்ப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.  நுரையீரலில் ஏற்பட்ட தொற்றின் காரணமாக வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை தரப்படுகிறது என்றும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

AKR

Having 20 years experience in the field of Journalism in various positions.

AKR has 46 posts and counting. See all posts by AKR

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே