ஏற்றத்தில் சென்செக்ஸ்…!

இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்றைய வணிகம் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாகக் கடந்த ஒன்றரை மாதங்களாக உலக அளவிலும் இந்தியாவிலும் பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று தொடக்கம் முதலே ஏற்றம் காணப்பட்டது. 

10 மணி அளவில் மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் 1319 புள்ளிகள் உயர்ந்து 28 ஆயிரத்து 910 ஆக இருந்தது.

தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு நிப்டி 369 புள்ளிகள் உயர்ந்து எட்டாயிரத்து 452 ஆக இருந்தது.

வங்கிகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்கு விலை 7 விழுக்காடு முதல் 17 விழுக்காடு வரை அதிகரித்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே