சபாநாயகரின் தகுதி நீக்க நோட்டீஸ்க்கு எதிராக சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏ நீதிமன்றத்தில் வழக்கு – இன்று விசாரணை

ராஜஸ்தான் சபாநாயகர் சிபி ஜோஷியின் தகுதி நீக்க நோட்டீஸை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சச்சின் பைலட்டும் 18 எம்எல்ஏக்களும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அந்த வழக்கு இன்று பிற்பகல் 3 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே நீடித்து வந்த பனிப்போர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியே வந்து பூதாகரமாக வெடித்தது.

இந்த நிலையில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு பெரும்பான்மை இல்லை என கூறி 18 எம்எல்ஏக்களுடன் சச்சின் பைலட் கிளர்ச்சியை ஏற்படுத்தினார்.

இருமுறை ஜெயப்பூரில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில் அதில் சச்சின் பைலட்டும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் கலந்து கொள்ளவில்லை.

இதையடுத்து சச்சின் பைலட் துணை முதல்வர் மற்றும் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவரது ஆதரவு இரு அமைச்சர்களும் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டனர்.

இதையடுத்து சச்சின் பைலட் மற்றும் 18 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் சிபி ஜோஷி தகுதிநீக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த நோட்டீஸை எதிர்த்து ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் சச்சின் பைலட்டும் 18 எம்எல்ஏக்களும் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீது இன்று பிற்பகல் 3 மணிக்கு விசாரணை நடைபெறுகிறது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே