கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,000 கோடி கடன் தள்ளுபடி – சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு

கூட்டுறவு வங்கியில் தமிழக விவசாயிகள் வாங்கிய ரூ.12,410 கோடி பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் தமிழக முதல்வர் பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பின் மூலம் தமிழகத்தில் சுமார் 16.43 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே