சென்னை அயனாவரத்தில் ரவுடி என்கவுண்டரில் கொலை!

ரவுடி சங்கரை பிடிக்கும் முயற்சியின்போது, போலீசார் மீது தாக்குதல் நடத்தியதால், போலீசாரால் சங்கர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சென்னையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்ட ரவுடி சங்கர், அயனாவரத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் அயனாவரத்தில் நியூ ஆவடி சாலையில் பதுங்கி இருந்த சங்கரை பிடிக்க முயன்றனர்.

அப்போது போலீசாரை ரவுடி சங்கர் அரிவாளால் வெட்டினார். இதில் முபாரக் என்ற போலீஸ்காரர் படுகாயமடைந்தார்.

இதனையடுத்து போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் சங்கர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சங்கரின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 

சங்கர் மீது, 4 கொலை வழக்குகள், 4 கொலை முயற்சி வழக்குகள், 29 அடிதடி மற்றும் ஆள்கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. சங்கரால் தாக்கப்பட்ட காவலர் முபாரக் தீவிர சிகிச்சையில் உள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே