புதிய கல்விக் கொள்கையானது வேலையை உருவாக்குபவர்களை உருவாக்கும்! – பிரதமர் மோடி

புதிய கல்வி கொள்கையின் நோக்கமே கற்றல், ஆய்வு, மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் தான் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:

* தரமான கல்விக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம்

* நமது கல்வி நடைமுறையை அதிநவீனமாக்க முன்னுரிமை

* மாணவர்கள் அதிநவீன கல்வியை பெற நடவடிக்கை

* புதிய கல்வி கொள்கை மூலம் கல்வி முறையில் இருந்த சிக்கல்கள் நீக்கப்பட்டுள்ளன.

* இளைஞர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் தேசிய கல்விகொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

* 21ம் நூற்றாண்டில் இளைஞர்களை மனதில் வைத்து புதிய கல்வி கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.

* 21ம் நூற்றாண்டு அறிவின் யுகம் அறிதல், ஆராய்ச்சி கண்டுபிடித்தல் ஆகிய மூன்றும் முக்கிய நோக்கம்

* புதிய கல்வி கொள்கையின் நோக்கமே கற்றல் ஆய்வு மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் தான்

* இவற்றில் கவனம் செலுத்தவே புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டது.

* வெறும் பாட அறிவு மட்டும் மனிதனை உருவாக்கிவிடாது

* புதிய கல்விக்கொள்கை மூலம் மாணவர்களுக்கான பாட சுமை குறைக்கப்பட்டுள்ளது.

* மனப்பாட முறையில் இருந்து சிந்தனை முறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

* கல்விக் கொள்கை மூலம் அனைவருக்குமான கல்வி கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

* புதிய கல்வி கொள்கையில், மாணவர்கள் என்ன படிக்க வேண்டுமோ அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது

* நமதுநாட்டில் மொழிப்பாடம் உணர்ச்சிப்பூர்வமானதால் அதற்கு முக்கியத்துவம்

* மனப்பாட முறையில் இருந்து சிந்தனை முறைக்கு வழிவகுத்துள்ளது.

* வேலை தேடுபவரை உருவாக்காமல், வேலையை உருவாக்க புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது

* அந்தந்த மாநில மாணவர்களின் தாய்மொழியில் மாணவர்கள் கல்வி கற்பதை தேசிய கல்வி கொள்கை வழிவகுக்கிறது.

* தாய்மொழி மூலம் மாணவர்கள் படித்து கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்.

* புதுமை, ஆராய்ச்சி, வளர்ச்சி இவற்றிற்கு முக்கியத்துவம், தர வேண்டும்.

* 21 ஆம் நூற்றாண்டின் புதுமைக்கேற்ப கல்வியை பயன்படுத்த வேண்டும்.

* கல்வி, விளையாட்டுத்துறையில் உலகத்தரத்திற்கு நிகரான வசதிகளை உருவாக்க வேண்டும்.

* இந்தியாவின் கல்வித்திட்டம் புதுமையாகவும், நவீனமாகவும் இருக்க வேண்டும் என்பதே நோக்கம்.

* இந்தியாவின் கனவையும், வருங்கால சந்ததியினரின் வளர்ச்சியையும் கருத்தில்கொண்டே புதிய கல்விக்கொள்கை உருவாக்கம்.

* கடந்த நூற்றாண்டுகளில், சிறந்த விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்களை உலகிற்கு வழங்கியுள்ளோம்.

* பெற்றோர், உறவினர், நண்பர்கள் அனைவருக்குமாக வலுக்கட்டாயமாக உருவாக்கப்பட்ட பாடங்களை படித்து வருகிறோம்.

* எதைப் படித்தார்களோ அது வேலைக்கு உதவவில்லை. 

இவ்வாறு மோடி பேசினார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே