குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மருத்துவமனையில் பரிசோதனைக்காக வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை காலை லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதால் பரிசோதனைக்காக தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு குடியரசுத் தலைவர் வந்துள்ளார்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், குடியரசுத் தலைவர் நலமாக உள்ளதாகவும், மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், ராம்நாத் உடல்நிலைக் குறித்து அவரது மகனிடம் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி விசாரித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே