மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி இப்போது தமிழக மக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதற்கு காரணம் அத்தொகுதி திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணன் அண்மையில் பாஜகவில் இணைந்தார்.
எனினும் அத்தொகுதியில் அதிமுக போட்டியிடுகிறது.
அவரை எதிர்த்து திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொன்னுத்தாய் என்பவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
இதனையடுத்து இருவரும் தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
சிபிஎம் வேட்பாளர் வழக்கம்போல் எளிமையான முறையில் மக்களிடம் சென்று ஆதரவு திரட்டி வருகிறார்.
அதாவது, தேர்தல் என்பது இப்போதெல்லாம் பணத்தைக் கொட்டி வாக்குகளை வாங்குவது என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது.
ஆனால் இதற்கு எப்போதும் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் விதிவிலக்காக உள்ளனர்.

அந்த வகையில் திருப்பரங்குன்றம் தொகுதியின் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பொன்னுத்தாயி-யின் கணவர் ஆட்டோ ஓட்டுநர்.
அவர் தொகுதியில் தனது கணவரின் ஆட்டோவில் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.
மிகவும் எளிமையான முறையில் வாக்கு சேகரிக்கும் அவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பல்வேறு தரப்பினரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த எளிமையினாலும் மக்களை அனுகும் முறையினாலும் எங்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டு மக்கள் வாக்களிப்பார்கள் என அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.