புதுச்சேரி: டாக்டர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி கேட்டுக் கொண்டு உள்ளார்.
ஆளுநர் கிரண்பேடி உயர் அதிகாரிகளை கொண்ட பல்வேறு வாட்ஸ் அப் குழுக்களை நிர்வகித்து வருகிறார். ஆனால் அவரது அதிரடியான உத்தரவுகளால், செயல்பாடுகளால் அதிருப்தி அடையும் அதிகாரிகள் அந்த குழுவில் இருந்து வெளியேறுகின்றனர்.
இப்போது அவர் அமைத்த வாட்ஸ் அப் குழுவில் இருந்து சுகாதாரத்துறை அதிகாரிகள வெளியேறி உள்ளனர். அதற்கு அவர் கடுமையாக நடந்து கொண்டதே காரணம் என்று கூறப்படுகிறது.
அதாவது, அண்மையில் சுகாதார இயக்குனர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் அறைக்கு கிரண்பேடி சென்று அதிகாரிகளை திட்டியதாக தெரிகிறது. இந்த வீடியோக்கள் வலைதளங்களில் பரவியது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் மருத்துவர்கள் பலர் வாட்ஸ் அப் குழுவில் இருந்து வெளியேறி இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு கிரண்பேடி பதிலளித்து உள்ளார். மருத்துவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.
அவர் கூறி உள்ளதாவது: அதிக நோயாளிகளை கவனிப்பதால் மருத்துவர்களுக்கு அதிக அழுத்தம் ஏற்படுகிறது என்று கேள்விப்படுகிறேன். அதில் உதவயே பலமுறை கருத்து கேட்கிறேன்.
ஆனால் பலர் பதில் அளிப்பதே இல்லை. உங்களின் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும். நீங்கள் பாதுகாப்புடன் இருப்பதையே விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.