தூத்துக்குடி அருகே விஷவாயு தாக்கி இறந்த 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி – முதல்வர் பழனிசாமி

தூத்துக்குடி மாவட்டம் செக்காரகுடி கிராமத்தில், விஷவாயு தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு, தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற போது நிகழ்ந்த விபத்தை குறிப்பிட்டுள்ளார்.

இந்த விபத்தில், திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரைச் சேர்ந்த பாண்டி, இசக்கிராஜ், பாலகிருஷ்ணன் மற்றும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் ஆகிய 4 பேரும் விஷ வாயு தாக்கி உயிரிழந்த செய்தியை அறிந்து வேதனை அடைந்ததாக அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த நான்கு பேரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும்; இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்க தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே